views 237

Arani

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாக இருக்கும் ஆரணி, பட்டுப்புடவைகளுக்கும் பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பிரசித்தமானது. கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்நகரம், இந்தியாவின் பட்டு நகரமாகவும், தமிழ்நாட்டின் அரிசி நகரமாகவும் அழைக்கப்படுகிறது.

ஆரணி பட்டு சேலை மற்றும் பொன்னி அரிசி ஆகியவை தேசிய விருதுகளை பெற்றுள்ளன. மேலும், புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம், கைலாசநாதர் ஆலயம் போன்ற பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உள்ளதால் கோவில்களின் நகரமாகவும் அறியப்படுகிறது.

இந்த நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலவி வருகின்றது.

இது சென்னையிலிருந்து 142 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 63 கி.மீ. தென்மேற்கிலும், வேலூரிலிருந்து 39 கி.மீ. தெற்கிலும், இராணிப்பேட்டையிலிருந்து 32 கி.மீ. தெற்கிலும், திருவண்ணாமலைக்கு 60 கி.மீ. வடக்கிலும் அமைந்துள்ளது.

ஆரணி நகரம், விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களுக்கிடையே ஒரு முக்கிய சந்திப்பு முனையாக விளங்குகிறது.

ஆரணி நகரத்திலிருந்து வந்தவாசி, திண்டிவனம், வேலூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செஞ்சி மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களுக்கு ஒருமணி நேரத்துக்குள் பயணம் செய்யலாம். பயணிகளின் வசதிக்காக நகரத்திலிருந்து தொடர்ச்சியான பேருந்து சேவைகள் அமைக்கப்பட்டுள்ளன, இதனால் போக்குவரத்து எளிதாக உள்ளது.

அண்மையில், பட்டுப்புடவைகள் மற்றும் அரிசி போன்ற இடப்பெயர்பாடுகளால், ஆரணி இந்திய அளவில் தனித்துவம் பெற்றுள்ளது.

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.